Search This Site

Sunday, December 28, 2008

அரசு டாக்டர்களுக்கான விருப்ப ஓய்வு முறை ரத்து

http://www.dailythanthi.com/article.asp?NewsID=459130&disdate=12/27/2008

பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக அதிரடி நடவடிக்கை: அரசு டாக்டர்களுக்கான விருப்ப ஓய்வு முறை ரத்து தமிழக அரசு உத்தரவு


சென்னை, டிச.27-

அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக, விருப்ப ஓய்வு முறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

காத்திருக்கும் அவலம்

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அரசு டாக்டர்களாக பலர் பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கையை கணக்கிடும் போது அவர்களை கவனிப்பதற்கு போதிய டாக்டர்கள் இல்லை. அரசு டாக்டர் இல்லாத பட்சத்தில் நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

அரசுப் பணியில் சேர்ந்துள்ள டாக்டர்கள், திடீரென்று விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் இல்லாமல் சிக்கல் ஏற்படுகிறது. அரசு டாக்டர் போய் விட்டால், அந்த இடத்தை நிரப்புவதற்கும் வெகுகாலம் விடுகிறது. எனவே நோயாளிகளின் திண்டாட்டம் தொடர்கதை ஆகிவிட்டது.

விருப்ப ஓய்வு ரத்து

இந்த நிலையையும், ஏற்கனவே அரசு ஆஸ்பத்திரிகளில் இருக்கும் டாக்டர்களின் பற்றாக்குறையை கணக்கில் கொண்டும் தற்போது தமிழக அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, அரசு டாக்டர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்தை அரசு ரத்து செய்துள்ளது. இதற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.

குறிப்பாக ஊரகப் பகுதியில் உள்ள டாக்டர்கள் விருப்ப ஓய்வு பெற முடியாது என்று அதில் கூறப்பட்டு உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மேலும், அரசு டாக்டர்கள் அளிக்கும் ராஜினாமா கடிதத்தையும் ஏற்கக் கூடாது என்று அரசாணையில் கூறப்பட்டு உள்ளது. இதுதவிர, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு உள்ள ஓய்வு வயது வரை (58 வயது வரை) அவர்கள் அரசு டாக்டராக பணியாற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தடையற்ற சான்றிதழ்

தனியார் ஆஸ்பத்திரிகளில் அதிக சம்பளம், பெரிய பதவிகள் வரும் போது அரசு டாக்டர்கள் பலர் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு, தனியார் ஆஸ்பத்திரிகளில் வேலைக்குச் சேருவது வழக்கம். இனிமேல் தனியார் ஆஸ்பத்திரிகளில் வேலைக்கு சேர்வதற்காக, விருப்ப ஓய்வு அல்லது ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு வெளியே செல்ல முடியாது.

இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு கடந்த 6 மாதங்களுக்குள் 5 தனியாருக்கு தடையற்ற சான்றிதழை தமிழக அரசு வழங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

The Comments are moderated. It will be published only after being by the screened by our team. We request your patience in this regard.

TargetPG on FaceBook