Search This Site

Sunday, March 8, 2009

இலவச மருத்துவ முகாம்களை நடத்த தடை! தமிழக அரசுக்கு நரேஷ் குப்தா உத்தரவு

http://www.dinamalar.com/fpnnews.asp?news_id=3178

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், வருமுன் காப்போம் திட்டம் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தடை விதித்துள்ளார்.லோக்சபா தேர்தல் தேதி, கடந்த 2ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 16ம் தேதி முதல் முதல்கட்ட ஓட்டுப்பதிவு துவங்குகிறது. தமிழகத்தில் மே 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், இதற்கான பணிகள் முழுவீச்சில் துவங்கிவிட்டன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில், சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் நலத்திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுவது ஆளுங்கட்சிக்கு சாதகமாகிவிடக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, தேர்தல் கமிஷன், அத்திட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வகையில் தற்போது சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்படும், "வருமுன் காப்போம்' திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குனர், "வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ், சிவகாசி பகுதியில் வாரந்தோறும் திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தக்கூடிய மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்துவது சம்பந்தமாக கடிதம் அனுப்பியிருக்கிறார்.இதுதொடர்பாக, தலைமைத் தேர்தல் கமிஷனின் அறிவுரை கோரப்பட்டுள்ளது. அதுவரை, தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, இதுபோன்ற முகாம்களை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

The Comments are moderated. It will be published only after being by the screened by our team. We request your patience in this regard.

TargetPG on FaceBook